search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணா நதி"

    • கிருஷ்ணா நதியில் குடிநீர் தேவைக்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த மாநில அரசு வலியுறுத்தியது.
    • காவிரி படுகையில் உள்ள பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மற்றும் ஜெகந்தி ராபாத் நகரப் பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா நதியில் குடிநீர் தேவைக்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த மாநில அரசு வலியுறுத்தியது.

    இதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவையும் பெங்களூருக்கு அனுப்ப திட்டமிட்டது. ஆனால் தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் அதனை ஒத்தி வைத்தனர்.

    இந்நிலையில் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களின் குடிநீர் தேவைக்காக அவசரமாக தண்ணீர் திறந்து விடுவோம் என கர்நாடகா நீர்ப்பாசன செயலாளர் உறுதியளித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில்:- காவிரி படுகையில் உள்ள பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியில் தற்போது தண்ணீர் திறந்து விட முடியாத சூழ்நிலை உள்ளது.

    ஆனால் கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்து விடும் அளவிற்கு அணைகளில் இருப்பு உள்ளது. அவசர தேவைக்காக தெலுங்கானா மாநிலத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை நிலவி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • கிருஷ்ணா நதியில் ஆங்காங்கே சாமி சிலைகள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • ஆற்றின் கரையோரம் பழங்கால சாமி கற்சிலைகள் இருப்பதை கண்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழையின் காரணமாக கிருஷ்ணா, கோதாவரி மற்றும் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பல்நாடு மாவட்டம் அச்சம்பேட்டை அம்பதிப்புடி கிருஷ்ணா நதிக்கு அப்பகுதி சேர்ந்த சிலர் நேற்று சென்றனர். அப்போது ஆற்றின் கரையோரம் பழங்கால சாமி கற்சிலைகள் இருப்பதை கண்டனர்.

    இதுகுறித்து கிராம மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. திரளான மக்கள் திரண்டு வந்து ஆற்றில் இருந்த விஷ்ணு மூர்த்தி, சிவலிங்கம் மற்றும் 2 நந்தி சிலைகளை கரைக்கு கொண்டு வந்தனர்.

    இதேபோல் தாடே பள்ளி மண்டலம் சீதா நகரம் என்ற கிராமத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் நாக தேவதை கற்சிலைகள் குவியல் குவியிலாக கண்டுபிடிக்கப்பட்டது.

    அங்கு சென்ற தொல்லியல் துறை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்ட நாக தேவதை சிலைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதில் பல சிலைகள் சேதம் அடைந்து காணப்பட்டது.

    ஆற்றில் இருந்து சாமி சிலைகள் மீட்கப்பட்ட தகவல் கிராமம் முழுவதும் பரவியதால் ஏராளமானோர் திரண்டு வந்து சாமி சிலைகளை வணங்கி சென்றனர்.

    தொல்லியல் துறை அதிகாரிகள் சாமி சிலைகள் எந்த நூற்றாண்டை சேர்ந்தது என ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஆற்று வெள்ளத்தில் சாமி சிலைகள் அடித்து வரப்பட்டதா அல்லது மணலுக்குள் அடியில் இருந்த சாமி சிலைகள் மழை வெள்ளம் காரணமாக மேலே வந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்களை இடிக்கும் போது சேதம் அடைந்த சாமி சிலைகளை கிருஷ்ணா நதியில் வீசி சென்றார்களா. அல்லது மழை வெள்ளத்தில் சாமி சிலைகள் அடித்து வரப்பட்டதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றன.

    கிருஷ்ணா நதியில் ஆங்காங்கே சாமி சிலைகள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தண்ணீர் திறக்கப்பட்டால் அதனை தேக்கி வைக்க ஏரிகளில் இடமில்லை.
    • ஏரிகளில் போதிய தண்ணீர் இருப்பதால் கிருஷ்ணா நதி நீர் திறப்பை நிறுத்தி வைக்க கூறி உள்ளோம்

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி ஆகும்.

    பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது சென்னை குடிநீருக்காக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படும்.

    தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் பூண்டி ஏரி முழு கொள்ளவை எட்டியது. மேலும் கண்டலேறு அணையில் இருந்தும் தொடர்ந்து கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதையடுத்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகின்றன.

    கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு அனுப்ப வேண்டும்.

    ஜூலை முதல் அக்டோபர் வரை முதல் தவணையில் 8 டி.எம்.சி.யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் வழங்க வேண்டும்.

    ஏற்கனவே சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. இதனால் தற்போது வந்து கொண்டு இருக்கும் கிருஷ்ணா தண்ணீரையே தேக்கி வைக்க முடியாத நிலை நிலவுகிறது. இதனால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும் என்று கடந்த மாதமே தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இதற்கிடையே கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி இந்த மாதம் (ஜனவரி) முதல் ஏப்ரல் வரையிலான 2வது தவணையாக வழங்க வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீர் திறப்பை நிறுத்தி வைத்து விட்டு சில மாதங்கள் கழித்து திறக்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளனர்.

    கண்டலேறு அணையில் இருந்து தற்போது 4 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டால் அதனை தேக்கி வைக்க ஏரிகளில் இடமில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 2,899 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 165 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை குடிநீருக்காக லிங்க் கால்வாய் மூலம் 550 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 3,115 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 3,491 மி.கன அடி தண்ணீர் இருக்கிறது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழ வரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கன அடி (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் தற்போது 10 ஆயிரத்து 775 மி.கன அடி (10.7 டி.எம்.சி.) தண்ணீர் உள்ளது.

    இந்த தண்ணீரை கொண்டு இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும். ஏரிகளில் போதிய தண்ணீர் இருப்பதால் கிருஷ்ணா நதி நீர் திறப்பை நிறுத்தி வைக்க கூறி உள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×